பொது சாலைகளில் மின்னியல் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை இயக்கும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) எச்சரிக்கையைக் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட பயன்பாட்டுக்கான நவீன போக்குவரத்து புரட்சியாகக் கருதப்படும் மைக்ரோமொபிலிட்டி வாகனங்களை, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் இயக்குவது 2021 டிசம்பரில் வெளியிடப்பட்ட உத்தரவின் படி சட்டவிரோதமாகும்.
இத்தகைய வாகனங்களில் மின்னியல் ஸ்கூட்டர்கள், அங்கீகரிக்கப்படாத மின்னியல் சைக்கிள்கள், hoverboard, மற்றும் segway போன்றவையும் அடங்கும். இந்த உத்தரவை மீறும் நபர்களுக்கு, அதிகபட்சம் 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது 3 மாத வரை சிறைதண்டனையும் விதிக்கப்படும்.