கடந்த ஞாயிற்றுக்கிழமை Semenyih-வில் உள்ள வீடொன்றில் போலீஸ் போல் ஆள்மாறாட்டம் செய்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் நாஸ்ரொன் அப்துல் யூசோஃப் உறுதிப்படுத்தினார்.
சிசிடிவி காமெரா பதிவில் சந்தேக நபர்கள் அனைவரும் முகமூடியை அணிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் 500 ரிங்கிட், தங்க நகைகள், இரு விவேக கைத்தொலைபேசிகள் என மொத்தமாக 9 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









