ஈப்போ: தெலுக் இந்தானில் நடந்த சாலை விபத்தில் எட்டு பெடரல் ரிசர்வ் யூனிட் ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ம்பேராக் தீயணைப்பு மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடன் கூறுகையில், தெலுக் இந்தானில் உள்ள ஜாலான் சிகாஸ்–சுங்கை லம்பாமில் காலை 8.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் பாறைகளை ஏற்றி சென்ற லோரி, 15 பணியாளர்களை ஏற்றிச் சென்ற FRU வாகனம் மோதியதாக அவர் கூறினார். தற்போது, எட்டு பேர் இறந்துவிட்டதாக என்னால் உறுதிப்படுத்த முடியும். மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் நடவடிக்கை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.









