புக்கிட் பிந்தாங்கில் முறையான அனுமதியின்றி இயங்கிவந்த 6 அழகு நிலையங்களுக்கு மூடுவிழா

கோலாலம்பூர்:

முறையான அனுமதியில்லாமல் இயங்கி வந்த 6 அழகு நிலையங்களை நிரந்தரமாக மூடுமாறு கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கி வந்த 6 அழகு நிலையங்களும் வர்த்தகத்திற்கான உரிமைகள் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.

சனிக்கிழமை மாலை இச்சோதனையை மேற்கொண்ட கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சம்மந்தப்பட்ட அழகு நிலையங்களை மூடியதுடன் 13 சம்மன்கள் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக அந்த அழகு நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், சுகாதாரமற்ற ஒப்பனை திரவங்களைப் பயன்படுத்தியதாகவும் அங்கீகரிக்கப்படாத அழகு சாதனப் பொருள்களை விற்பனை செய்ததாகவும் தகுதியற்ற ஒப்பனை கலைஞர்களைப் பணிக்கு அமர்த்தியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட அழகு நிலையங்கள் போலி ஆவணங்களின் மூலமாக வணிகக் கடைகளை நடத்தியிருப்பதையும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உறுதிச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here