டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் குடும்பத்தினருக்கு பிரதமர், துணைப்பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலமான மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் குடும்பத்தினருக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார். 1990 முதல் மஇகாவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு அரசு பதவிகள் வகித்ததன் மூலம் பழனிவேல் தேசத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்ததாக பிரதமர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார். இந்திய சமூகம், கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆதரிப்பதில் அவரது பங்களிப்புகள் மிகவும் மதிப்புமிக்கவை. இந்த இழப்பு நேரத்தில் அவரது குடும்பத்தினர் வலிமையை தரட்டும் என்று அவர் கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியும் பழனிவேலின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். தேசம் ஒரு அரசியல் பிரமுகரை மட்டுமல்ல, அர்ப்பணிப்புடன் சேவை செய்த ஒரு ரத்தினத்தையும் இழந்துவிட்டது என்று அஹ்மத் ஜாஹிட் கூறினார். முன்னாள் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் 76, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here