உரிமமின்றி மின்னணு கழிவுகள் மறுசுழற்சி; ஐந்து மியன்மார் நாட்டினர் கைது

பத்து காஜா:

லஹாட் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், உரிமம் இல்லாமல் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்ததாக நம்பப்படும் ஐந்து மியன்மார் நாட்டினரை பொது செயல்பாட்டுப் படை (GOF) கைது செய்தது.

நேற்று மாலை 7 மணி முதல் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட ஓப் ஹசார்ட் மூலம் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு பெண் உட்பட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக PGA உலு கிந்தா வடக்கு படைப்பிரிவு தளபதி SAC ஷாஹ்ரம் ஹாஷிம் தெரிவித்தார்.

“மின்னணு கழிவுகள், பிளாஸ்டிக், உலோகம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றை பதப்படுத்தும் செயல்பாடு சுமார் ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்டதாக புலனாய்வு முடிவுகள் கண்டறியப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழல் துறையின் எந்த ஒப்புதலும் இல்லாமல் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

“இந்த தொழிற்சாலையின் உரிமையாளரைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறும் பணியில் நாங்கள் இன்னும் இருக்கிறோம்,” என்று அவர் இன்று இங்கு அருகிலுள்ள லஹாட்டில் உள்ள Op Hazard 2.0 ஒதுக்கீட்டில் PGA வடக்கு படைப்பிரிவு தலைமையக புலனாய்வு பிரிவின் வெற்றி குறித்து நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் குறித்த தொழிற்சாலை உரிமையாளர் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும் தாம் கண்டறிந்துள்ளதாக ஷாரம் கூறினார்.

குடியேற்றச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) மற்றும் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் பிரிவு 34A மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 34B ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here