ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ; சையத் சாதிக்கின் விதி மாறுமா?

கோலாலம்பூர் :

னக்கு எதிராக தொடரப்பட்ட (ARMADA) ஊழல் குற்றச்சாட்டினை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ள மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை (ஜூன் 25) வழங்கப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த பரபரப்பான மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை தெரிந்துகொள்ள காலை 7.30 மணிக்கே ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தில் கூடியுள்ளனர்.

சையத் சாதிக்கிற்கு ஆதரவாக குடும்பத்தினர், நண்பர்கள், மூடா கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடியிருந்ததால் நீதி மன்றத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் மற்றும் நடிகர் பெல்லா அஸ்டில்லா ஆகியோர் அங்கு கூடியிருந்தனர்.

முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் மூடா கட்சியின் தலைவருமான சையத் சாதிக்கின் தண்டனை உறுதி செய்யப்படுமா அல்லது விடுவிக்கப்படுவாரா பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here