இந்தியர்கள் தொடர்பான திட்டங்கள் குறித்து பிரதமரைச் சந்திக்க விரும்பும் அமைப்புகளின் முக்கிய ஒன்றுகூடல்

கோலாலம்பூர்,

இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்காக 13வது மலேசியத் திட்டத்தில் (13MP) செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹீமை சந்திக்க இரண்டு தேசிய அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

SICC மற்றும் Yayasan Iltizam Malaysia என்ற இரண்டு கூட்டமைப்புகள், ஜூன் 23ஆம் தேதி, தங்களது முழுமையான பரிந்துரைகளை பொருளாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ளன. ஆனால் இதுவரை பதிலளிக்கப்படவில்லை என கிள்ளான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் SICC தலைவரான சார்லஸ் சாண்டியாகோ கூறினார்.

இதன்போது,13MP கட்டமைப்பின் கீழ், இந்திய சமூகத்துக்கு எதிராக நிலவும் அமைப்புசார்ந்த தடைகளை நீக்க 5 துறைகளில் மொத்தம் 40 பரிந்துரைகள் மற்றும் 11 செயல் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது:

கல்வி சீர்திருத்தங்கள்,பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) வளர்ச்சி, நிறுவன சீர்திருத்தங்கள், நல்ல நிர்வாகம் போன்றவரை அடிப்படையாக கொண்டு இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த முக்கிய திட்டங்கள் இவை.

1.சமூக ஆலோசனைகளில் இருந்து உருவான திட்டங்கள்.
இந்த பரிந்துரைகள் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், கல்வியாளர்கள், சமூகத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனான ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2.கல்வியில் கவனம் – முன்பள்ளி கட்டாயம் வேண்டும்
இந்திய மாணவர்களிடம் 30% முதல் 50% வரை உள்ள கல்வியை இடையில் கைவிடும் அளவைக் குறைக்கும் வகையில், முன்பள்ளி கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

3. இளைஞர், பெண்களுக்கு 40 சமூக ஆய்வகங்கள்
மறுநாள் 5 ஆண்டுகளில், இந்திய பெண்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி, பயிற்சி, தொழில் முயற்சி ஆகியவற்றுக்கு ஆதரவாக 40 சமூக ஆய்வகங்கள் (labs) அமைக்க வேண்டும் எனவும் முன்மொழிந்துள்ளனர்.

4.மலேசிய இந்தியர்கள் வளர்ச்சிக்கான நிதி
இந்தியர்களுக்கு சொந்தமான சிறு குறு வணிகங்கள் வளர, Malaysian Indian Development Fund எனும் சமூக நிதியை உருவாக்க வேண்டும். இதில் மாதம் RM10 – RM30 வரை பங்களிக்கலாம், அதன் மூலம் RM50 மில்லியன் நிதி திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

5. MITRA-வுக்கு நாடாளுமன்ற மேற்பார்வை வேண்டும்
இந்திய சமூகத்துக்கான திட்டங்களை முறையாக கண்காணிக்க MITRA அமைப்பை சட்டபூர்வமான நிறுவனமாக மாற்றி, அதற்கு நாடாளுமன்ற மேலாண்மை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர்.

6.13MP ஜூலை 21 – ஆகஸ்ட் 28 வரை நாடாளுமன்றத்தில் வருமாறு எதிர்பார்ப்பு
13வது மலேசியத் திட்டம், முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி விலகியதையடுத்து, தற்போது மீளாய்வாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இது ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here