MRT பேருந்து ஓட்டுநர்-சைக்கிள் ஓட்டிகள் மோதல் வீடியோ வைரல்: விசாரணை மேற்கொண்ட Rapid KL

கோலாலம்பூர்,

சில சைக்கிள் ஓட்டிகளுக்கு அருகில் MRT பேருந்து ஓட்டியதை காட்டும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, Rapid KL தலைமையகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த சம்பவம் சைக்கிள் ஓட்டியவர்களில் ஒருவரால் வீடியோ பிடிக்கப்பட்டதாகவும், அது இணையத்தில் வைரலானதையடுத்து சாலை பாதுகாப்பு மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் நடத்தை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

எனினும், Rapid KL வெளியிட்ட அறிக்கையில், சைக்கிள் ஓட்டிகள் இடது வழித்தடத்தை முழுமையாக பிடித்ததால், பேருந்து ஓட்டுநருக்கு முன்னே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி சைக்கிள் குழுவிடம் நேரடியாக பேச வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

அப்போது சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது, ஆனால் செயல்பாட்டில் இருந்த சாலை போக்குவரத்து துறை (RTD) அதிகாரி ஒருவர் நிலையை கட்டுப்படுத்தியதாகவும் Rapid KL தெரிவித்தது.

சம்பவத்துக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு விசாரணையின் ஒரு பகுதியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளைச் சீராக கையாளும் முறையில் மேம்பாடு செய்யும் நோக்கத்துடன் என Rapid KL கூறியுள்ளது.

மேலும், அனைத்து ஓட்டுநர்களுக்கும், மென்மைப் போக்கு மற்றும் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here