இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு அடிமை: டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை

ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை. 25 வயதான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றுள்ளார. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிகிறது.

அவரது தந்தை பலமுறை கண்டித்த போதிலும், ராதிகா ரீல்ஸ் அடிமையில் இருந்து மீளவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர் தனது மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஐந்து முறை சுட்டதில் மூன்று குண்டுகள் பாய்ந்து ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து, ராதிகாவின் தந்தை பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here