பன்றி இறைச்சி கடத்தல், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணிநிறுத்தம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கவனம்

கோலாலம்பூர்,

பன்றி இறைச்சி கடத்தல், பான் போர்னியோ (Pan Borneo) நெடுஞ்சாலை கட்டுமான நிலை, மேலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணிநிறுத்தம் ஆகியவை இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட உள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸி ட்சின், பன்றி இறைச்சி கடத்தலுக்கு எதிராக MAQIS எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இதுவரை நடந்த கைதுகள் குறித்து கடந்த நாடாளுமன்ற அவையில் கேள்வி எழுப்பினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ’ டாக்டர் அலியாஸ் ரசாக், நிலையான காட்டு பகுதியில் நடைபெறும் அரிதான நிலக்கரி (REE) சுரங்க ஆய்வு நிலையை கேட்டார்.

அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ’ மாத்பாலி முசா, பான் போர்னியோ நெடுஞ்சாலை (WP01 சிண்டுமின்-மெலாலியா, WP02 மெலாலியா-பியூபோர்ட்) திட்ட முன்னேற்றத்தை விளக்குமாறு கேள்வி எழுப்பினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் வாங் ஷூ கி, 2020 முதல் ஜூன் 2025 வரை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள் ராஜினாமா செய்த எண்ணிக்கை மற்றும் புதிய நியமனங்கள் குறித்து சுகாதார அமைச்சரிடம் விளக்கம் கேட்டார்.

இன்று இவற்றுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்ட்டபின், 13வது மலேசிய திட்டம் (RMK13) குறித்த விவாதத்திற்கான அமைச்சர்களின் பதிலளிப்பும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here