மின்னணு கழிவு கடத்தல் கும்பலுக்கு பேரிடி: ‘Op Hazard’ சோதனையில் RM582 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்! 515 பேர் அதிரடி கைது

கோலாலம்பூர் | ஏப்ரல் 10, 2026

மலேசியா முழுவதும் சட்டவிரோதமாக இயங்கி வந்த மின்னணு கழிவு (E-waste) சுத்திகரிப்பு ஆலைகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ‘Op Hazard 3.0’ அதிரடி வேட்டையில், சுமார் 582 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சொத்துக்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நாடு தழுவிய நடவடிக்கை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது என்றும், 11 மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆலைகள் மற்றும் கடத்தல் கும்பல்களைக் குறிவைத்து மொத்தம் 110 இடங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன என்றும், மலேசியப் போலீஸ் படைத் தலைவர் (IGP) டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இன்று புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தச் சோதனையின் போது 868 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் பல்வேறு குற்றங்களுக்காக 515 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இந்த முறையற்ற மின்னணு கழிவு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மொத்தம் 223 விசாரணை அறிக்கைகள் (Investigation Papers) திறக்கப்பட்டுள்ளன. பிடிபட்ட கும்பல்கள் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு, முறையான அனுமதியின்றி ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

மலேசியாவைச் சர்வதேச மின்னணு கழிவுகளின் குப்பை மேடாக மாற்றுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த ‘Op Hazard’ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 582 மில்லியன் ரிங்கிட் என்பது இந்தத் துறையில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தொகையாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here