மெர்டேக்கா தினத்துக்குப் பிறகு, பிரதமர் அன்வார் நான்கு நாள் சீனப் பயணம்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 68ஆவது மெர்டேக்கா தின அணிவகுப்பில் பங்கேற்ற பிறகு, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சீனாவுக்குப் புறப்படுகிறார்.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறும் இந்தப் பயணம், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் நடைபெறுகிறது. அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்பு மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போருக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்புப் போரின் வெற்றியின் 80வது ஆண்டு நினைவு தின விழாவில் அன்வார் கலந்து கொள்வதோடு, சீன தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உள்ளார்.

வெளிநாட்டு அமைச்சகத்தின் தகவல்படி, இந்த பயணம் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் மலேசியா-சீனா ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய தளமாக இருக்கும்.

அதே நேரத்தில், அன்வார் சீனாவில் வசிக்கும் மலேசியர்களையும் சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here