பேஸ்புக் முதலீட்டு மோசடி: 55 வயது வர்த்தகருக்கு RM571,242 இழப்பு

பத்து பஹாட்:

பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட இல்லாத முதலீட்டு திட்டத்தில் சிக்கி, 55 வயதான ஒரு பெண் வர்த்தகர் ஒருவர் தனது சேமிப்பான RM571,242 ஐ இழந்தார்.

கடந்த 2024 மார்ச் 16 அன்று அதிக வருமானம் தரும் முதலீட்டு சலுகை பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதில் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்டவர், வாட்ஸ்அப் மூலம் தெரியாத ஒருவரைத் தொடர்பு கொண்டார் என்று, பத்து பஹாட் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 10 முதல் 31 வரை, அவர் மூன்று வங்கி கணக்குகளில் மொத்தம் RM571,242 பரிவர்த்தனை செய்தார். அதன்பின், முதலீட்டு செயலியில் RM804,000 லாபம் காட்டப்பட்டதைக் கண்ட அவர், அந்தத் தொகையை எடுக்க முயன்றார். ஆனால், அவரது கணக்கு தடுக்கப்பட்டு, எந்த வருமானமும் வழங்கப்படவில்லை.

இதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்து, போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி) யின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இந்த மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது:

  • அதிக வருமானத்தை உறுதியளிக்கும் முதலீட்டு திட்டங்களில் எளிதில் சிக்காதீர்கள்.
  • வணிகக் குற்றங்கள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அதிகாரப்பூர்வ சைபர் குற்ற எச்சரிக்கை போர்டல் மூலம் பெறுங்கள்.
  • மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக தேசிய மோசடி மறுமொழி மையத்தை (NSRC) 997 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இதனால், பணம் வெளியேறும் முன் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here