மலேசியா-சீனா ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் கூட்டாண்மை-இணைந்து செயல்பட ஒப்பந்தம்

மலேசியா மற்றும் சீனா, ஸ்மார்ட் சிட்டி முதற்கட்ட திட்டங்களில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளன, மேலும் மலேசியாவின் இரண்டாம் நிலை நகரங்களான ஈப்போ மற்றும் செபராங் பிறையில் ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாட்டு மையங்களை நிறுவும் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பு, வீடு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் சீனாவின் வீடு மற்றும் நகர்ப்புற-கிராம வளர்ச்சி அமைச்சர் ஹெச்.இ. நீ ஹாங் ஆகியோருக்கிடையேயான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மலேசியா, சீனாவின் முன்னேற்ற நகர செயல்தளங்கள், ஹாங்ஜோ சிட்டி பிரெய்ன் மற்றும் ஷென்ழென் ஸ்மார்ட் சிட்டி டேட்டா பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி பல திட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றார் அவர்.

மேலும், சக்தி சேமிப்புச் செயல்பாடுகள், வீட்டு தானியங்கி அமைப்புகள், ஸ்மார்ட் மீட்டரிங், கட்டிட மேலாண்மை, குடியிருப்பாளர்களுக்கான டிஜிட்டல் இணைப்பு, வசதிகள் பதிவு, பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் சமூக ஒத்துழைப்பு செயலிகள், சூரிய சக்தி, கழிவு பிரிப்புத் திட்டங்கள் மற்றும் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்கள் போன்றவையும் இதனுள் அடங்கும் என்றார் அவர்.

இதனிடையே அமைச்சர், வரும் ASEAN+3 ரியல் எஸ்டேட் கான்பரன்ஸ் (AREC) 2026-ல் சீனாவை பங்கேற்க அழைத்தார், இதில் முதல் முறையாக தென் கொரியா மற்றும் ஜப்பான் முக்கிய கூட்டாளிகளாக வருகை தர உள்ளனர்.

அவர் மேலும், மலேசியா-சீனா அரச அதிகாரிகளுக்கிடையேயான மாற்று பயிற்சி திட்டம் (exchange training programme) மூலம் நகர வடிவமைப்பு மற்றும் பொதுப்பொலிசியில் திறன்களை மேம்படுத்த பரிந்துரை செய்தார். மலேசியா சீனாவுடன் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து SDG மற்றும் 2030 திட்ட நோக்கங்களை நிச்சயமாக அடைய தயாராக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here