கோலாலம்பூர்:
பாங்காக்கின், மையப் பகுதியில் உள்ள, `வாஜிரா மருத்துவமனைக்கு’ (Vajira Hospital) வெளியே, 900 சதுர மீட்டர் பரப்பளவு, கொண்ட, 50 மீட்டர் ஆழத்தில், ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டதால், அதை, கட்டுப்படுத்த தாய்லாந்து, அதிகாரிகள், விரைந்து, செயல்பட்டனர்.
ஒரு, நிலத்தடி, ரயில், திட்டத்திலிருந்து, மண், சரிந்ததால், ஏற்பட்ட, இந்த, பள்ளம், குழாய்களை, வெடிக்கச், செய்தது.
இதனால், தண்ணீர் இணைப்பும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது, மேலும், மின் கம்பங்களையும், இழுத்துச், சென்றது.
இந்தச் சம்பவத்தில், உயிரிழப்பு, எதுவும், ஏற்படவில்லை என்று, தாய்லாந்து பிரதமர், அனுட்டின் சான்விரகுல் (Anutin Charnvirakul) உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, ஆளுநர், சட்சார்ட் சித்திபுன்ட் (Chadchart Sittipunt) கூறுகையில், நோயாளிகள், பாதுகாப்பாக, உள்ளனர் என்றும், ஆனால், அருகிலுள்ள, காவல்துறை ஊழியர்கள், வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மதியம் நில அசைவு நிறுத்தப்பட்டது, மேலும் கண்காணிப்பு, நடந்து, கொண்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






















