ஜாலான் பர்மா சாலையில் ஏற்பட்ட குழி சீரமைப்பு : போக்குவரத்துக்காக சாலை மீண்டும் திறக்கப்பட்டது

ஜார்ஜ் டவுன்:

இன்று அதிகாலையில் சாலையில் ஏற்பட்ட குழியில் (sinkhole) குழாய் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு ஜாலான் பர்மா சாலை போக்குவரத்திற்கு முழுமையாக திறக்கப்பட்டது.

குறித்த பிரதான பாதை இப்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பானது என்பதை பினாங்கு தீவு நகர சபை மேயர் டத்தோ ஏ. ராஜேந்திரன் உறுதிப்படுத்தினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இன்டா வாட்டர் கன்சோர்டியத்திற்குச் சொந்தமான 300 மில்லிமீட்டர் கழிவுநீர் குழாய் எதிர்பாராத விதமாக வெடித்ததால் இந்த சிங்க்ஹோல் ஏற்பட்டது.

இந்த குழாய் பழுதடைந்ததால் சாலை மேற்பரப்பில் கடுமையான சேதம் ஏற்பட்டது மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த திங்களன்று, இணைப்பு மாற்றத்தின் காரணமாக கழிவுநீர் குழாய் இடிந்து விழுந்ததால் இந்த சிங்க்ஹோல் ஏற்பட்டது என்று IWK தெளிவுபடுத்தியது. விரிவான பழுதுபார்ப்புப் பணிகளின் ஒரு பகுதியாக புதன்கிழமை அதிகாலையில் ஒரு புதிய மேன்ஹோல் மூடியும் நிறுவப்பட்டது. பின்னர் சேதமடைந்த கழிவுநீர் குழாய் முழுமையாக மாற்றப்பட்டதாக ராஜேந்திரன் நேற்று அறிவித்தார்.

அனைத்துப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதிகாலை 4 மணிக்கு சாலை அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதை மேயர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here