அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலம் பாம் பே நகரில், ஒரு உள்ளூர் கவுன்சில் உறுப்பினர் இந்தியர்கள் குறித்த இனவெறி மற்றும் வெள்ளை மேலாதிக்க கருத்துகளை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஃப்ளோரிடாவின் துணை நிலை ஆளுநர் ஒருவர் இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். “இந்தியர்கள் எங்கள் அண்டை வீட்டார், எங்கள் நண்பர்கள். நீங்கள் இந்த நாட்டின் அங்கமாக இருப்பது எங்களுக்கு பெருமை,” என அவர் வலியுறுத்தினார்.
கவுன்சிலரின் பேச்சு “உள்நோக்கம் கொண்ட, பிரிவினைவாத, இனவெறி மற்றும் வெள்ளை மேலாதிக்க கருத்துகள்” என்று அவர் சாடினார். மேலும், “வெள்ளை மேலாதிக்கமும், இனவெறிப் பாரம்பரியமும் தோல்வியடைந்தவை. அதை பற்றிக்கொண்டு நிற்பது பலத்தின் அடையாளமல்ல, மாறாக தோல்விக்கு விசுவாசம் காட்டுவது” என்றும் தெரிவித்தார்.
இத்தகைய கருத்துக்கள் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இனவெறி மற்றும் வெள்ளை மேலாதிக்கத்தை கைவிடுவது தான் உண்மையான முன்னேற்றம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் இந்தியர்களை வெளியேற்ற பல முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இனவெறியை தூண்டும் முயற்சி தான் சிலரின் “கடைசி ஆயுதமாக” மாறியுள்ளதாகவும் அவர் சாடினார்.




















