மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர்

சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநில மகளிர் ஆணையம் என்பதையெல்லாம் தாண்டி தற்போது நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடுத்துள்ளார். சென்னை ஐகோர்ட்டுக்கு வெளியே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பலர் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை ஐகோர்ட்டை அணுகியுள்ளேன். இந்தப் பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிட வேண்டாம். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்”, என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், திருமண மோசடி புகார் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here