கூலிம்: இன்று அதிகாலை பாயா பெசாரில் நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இருபத்தி இரண்டு பேர் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
நள்ளிரவு 12.45 மணியளவில் சாலையோரத்தில் ஏராளமான மக்கள் வாணவேடிக்கை நிகழ்ச்சியைக் காண கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூலிம் காவல்துறைத் தலைவர் சுல்கிஃப்லி அசிசான் தெரிவித்தார். எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததால் பலர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு ஆரம்ப சிகிச்சை அளிக்க இரண்டு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஒருவரின் நெற்றியில் சுமார் 5 செ.மீ ஆழத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், மற்றவர்களுக்கு லேசான தீக்காயங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவும் சுல்கிஃப்ளி கூறினார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட பின்னர் நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








