அக்டோபர் 9 ஆம் தேதி பினாங்கின் பட்டர்வொர்த்தில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக 41 வயதான ஓங் வெய் ஹாவோவை போலீசார் தேடி வருகின்றனர். செபராங் பிறை உத்தாரா காவல்துறைத் தலைவர் அனுவர் அப்துல் ரஹ்மான், ஓங்கின் கடைசி அறியப்பட்ட முகவரி, பட்டர்வொர்த், ஜாலான் வில்லா தஞ்சோங், வில்லா தஞசோங் காண்டோமினியம், ஏ-7-07 என்ற யூனிட்டில் இருந்தது என்றார்.

கொலை வழக்கு குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி நோர்ஹாஸ்லினா ரஹ்மத்தையோ 04-5762222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டார். காப்பீட்டு முகவர் லீ பூன் ஹான் (31) என்பவரின் உடல், அக்டோபர் 9 ஆம் தேதி பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் பெர்மாத்தாங் பாவ் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ஒரு சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அவரது கைகள் கட்டப்பட்டு, அவரது தலை பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தது. வேலை விஷயமாக பெர்லிஸுக்குச் சென்றிருந்த அவர் அக்டோபர் 8 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது. விசாரணைகளுக்கு உதவுவதற்காக 24 முதல் 32 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் நாளை வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.








