புதிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் ஏற்றுக்கொள்ளல் காரணமாக மலேசியாவின் உலகளாவிய வணிக சேவைகள் (GBS) சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளன என்று இலக்கியவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். இன்று தொடங்கிய GBS ASEAN உச்சநிலை மாநாடு 2025 இல் GBS 5.0: மனித மையப்படுத்தப்பட்ட, ஏஐயால் இயக்கப்படும் தாக்கத்தை மையமாகக் கொண்டது என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த உச்சநிலை மாநாடு இரண்டு முக்கிய சிறப்பம்சங்களைக் கண்டது. இந்த உச்சிமாநாடு இரண்டு முக்கிய சிறப்பம்சங்களைக் கண்டது – GBS மலேசியா இடைக்கால அறிக்கை 2025, GBS மலேசியா – Universiti Kebangsaan Malaysia (UKM) இடையேயான ஒப்பந்தப் பத்திரத்தின் (MOA) அதிகாரப்பூர்வ பரிமாற்றம் ஆகியவைகளாகும்.
அறிக்கையின்படி, மலேசியாவில் 2022 முதல் GBS நிறுவனங்கள் 66.8% அதிகரித்து, தற்போது 749 நிறுவனங்களாக உள்ளன. முதலீடுகள் 13.5 மடங்கு அதிகரித்து 2021 இல் 0.73 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 2024 இல் 9.87 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இது 36,000 க்கும் மேற்பட்ட உயர் வேலைகளை உருவாக்கியுள்ளதோடு 2025 இல் GBS வருவாயை 28.14 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா தற்போது உலகளாவிய சேவைகள் இருப்பிடக் குறியீட்டில் உலகளவில் 3ஆவது இடத்தில் உள்ளது மேலும் டிஜிட்டல் போட்டித்திறன், புதுமை, முதலீட்டு நம்பிக்கை ஆகியவற்றிற்காக ஆசியான் முதல் 3 இடங்களில் தொடர்ந்து உள்ளது. இந்த இடைக்கால அறிக்கையின் கண்டுபிடிப்புகள், தொழில்துறை சாதனைகள், சவால்கள், எதிர்காலப் பாதையை எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான முன்னேற்றக் குறிகாட்டியாகும். இந்த அறிக்கை, 2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக மாற்றுவதற்கான எங்கள் டிஜிட்டல் உருமாற்றத் திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவும்.
மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு, தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எதிர்கால GBS திறமையை வளர்க்கவும் அமைக்கப்பட்ட புரிந்துணர்வு பரிமாற்றம் ஆகும். நமது மாணவர்கள் பணியிடத்தில் சேரும்போது சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்க இதுபோன்ற ஒத்துழைப்பு முக்கியமானது. எனவே, இந்த உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக GBS மலேசியாவைப் பாராட்ட விரும்புகிறேன் என்று கோபிந்த் தெரிவித்தார். மேலும் முக்கியமாக, நமது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்குவதோடு, மலேசியாவை டிஜிட்டல் நாடாக மாற்ற உதவுவதில் அவர்களின் முன்முயற்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன் என்றார்.










