இடியுடன் கூடிய கனமழை: KLIA க்குள் கசிந்த மழை நீர்!

புத்ராஜெயா:

இடியுடன் கூடிய கனமழைக்குப் பின்னர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1 இன் பல பகுதிகளில் மழை நீர் கசிவு ஏற்பட்டதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) இன்று மதியம் உறுதிப்படுத்தியது.

MAHB வெளியிட்ட அறிவிப்பில், நிலைமையை கட்டுப்படுத்த பொறியியல், செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் உடனடியாக செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதில் பயணிகள் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மின்சார அமைப்புகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

“எந்தவொரு செயல்பாட்டு பாதிப்பையும் குறைப்பதற்காக எங்கள் விமான நிறுவன கூட்டாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து பணிபுரிந்து வருகிறோம்,” என MAHB கூறியுள்ளது.

இதற்கு முன், புறப்படும் மண்டபத்தில் ஏற்பட்டதாக நம்பப்படும் நீர் கசிவு சம்பவத்தைக் காட்டும் 26 விநாடி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here