கோலாலம்பூர்:
ஜோகூர் வழியாக தமது கடைப்பிதழை குடிநுழைவு அதிகாரிகளிடம் காட்டாமல் மலேசியாவை விட்டு வெளியேற முயன்றதற்காக 23 மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயல்கள் அக்டோபர் 16 அன்று, சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் (BSI) சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்தில் உள்ள வெளிச்செல்லும் மோட்டார் சைக்கிள் பாதையில் நடந்தன.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (MCBA) தெரிவித்ததாவது, 26 நபர்களும் கடப்பிதழ் சட்டம் பிரிவு 2(2)-ஐ மீறியுள்ளனர். இந்த சட்டம், எல்லையைத் தாண்டும் போது பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டை பணியில் உள்ள குடிவரவு அதிகாரியிடம் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.
நேற்று பெக்கான் நேனாஸ் சிறப்பு குடிநுழைவு நீதிமன்றம், குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டிகளில் அறுவருக்கு தலா RM1,000 அபராதமும், 13 பேருக்கு தலா RM1,500 அபராதம் விதித்தது. மீதமுள்ள மூன்று பேர் மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து பயணித்தவர்கள் என்பதால் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.



















