குரங்கை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் இருவருக்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

BACHOK,

ஒரு குரங்கைக் குத்தி தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டில் இரு ஆண்கள் இன்று இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டனர்.

முஹம்மது அமீருல் ஆஃபிக் சனுசி (24) மற்றும் முஹம்மது கைருல் அசிமான் ஷம்சுடின் (28) ஆகியோர் மீது குற்றச்சாட்டு வாசித்து காட்டப்பட்டபோது, இருவரும் குற்றமற்றவர்கள் என வாதிட்டனர். விசாரணை மஜி ஸ்திரேட் அமின் ரஷீதி ரம்லி முன்னிலையில் நடைபெற்றது.

முஹம்மது அமீருல், நவம்பர் 1 அன்று மாலை 6.30 மணியளவில் கம்போங் ஜெம்பல், ஜாலான் தாவாங் பகுதியில் ஒரு கைவிடப்பட்ட வீட்டின் அருகே ஆண் குரங்கை குத்தி அடித்து பயமுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த குற்றம், ‘விலங்கியல் சட்டம் 1953’ இன் பிரிவு 44(1)(a) கீழ் வருகிறது. இது ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் RM50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம் என தண்டனை பிரிவு குறிப்பிடுகிறது.

முஹம்மது கைருல், இக்குற்றத்தைச் செய்ய அமீருலுக்கு உதவியதாக, குற்றவியல் சட்டப்பிரிவு 109 உடன் இணைத்து, பிரிவு 44(1)(a) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் முகம்மது ஹபீல் சைனல் அபிடின் குறைந்த ஜாமீன் கோரிக்கை விடுத்த நிலையில், துணை பொது வழக்கறிஞர் முகம்மது ஐமான் ஷாஹ்மி யஸித் ஒவ்வொருவருக்கும் RM10,000 ஜாமீன் கோரினார்.

நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் ஒரு நபரை ஜாமீன் தருநராகக் கொண்டு RM5,000 ஜாமீன் வழங்கி, வழக்கின் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக டிசம்பர் 24 தேதியை நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here