கான்கிரீட் மிக்சர் லோரியுடன் மோதியதில் 17 வயது SPM மாணவர் ஒருவர் உயிரிழப்பு — நண்பர் படுகாயம்

கோலாலம்பூர்:

கூலிமில் உள்ள ஜாலான் லூனாஸ்–பண்டார் பெர்மாத்தாவில் நேற்று நடைபெற்ற ஒரு விபத்தில், 17 வயதான SPM மாணவர் ஒருவர் உயிரிழந்தார்; அவரது பள்ளித் தோழர் படுகாயமடைந்தார்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒரு கான்கிரீட் மிக்சர் லோரியுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் நடந்தது என்று, கூலிம் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் துணை கண்காணிப்பாளர் தெங்கு முகமட் பைசல் தெங்கு யெங் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் SMK படாங் செறை பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றும், நேற்று மாலை 4.15 மணியளவில் ஒரு பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில், யமஹா லஜெண்டா 100 மோட்டார் சைக்கிள் மற்றும் கான்கிரீட் மிக்சர் லோரியுடன் மோதல் ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.

“மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற SPM வேட்பாளர் பலத்த தலை மற்றும் உடல் காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here