விமானிகள் பற்றாக்குறை: ஒரே மாதத்தில் 1,200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

புதுடெல்லி :

இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மட்டும், இண்டிகோ விமான நிறுவனம் ஏறக்குறைய 1,200-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, இந்திய விமானப் போக்குவரத்து பொது இயக்ககம் (DGCA) இண்டிகோவிடம் விளக்கம் கேட்டுள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ ரத்து செய்தது. டெல்லியில் 38, மும்பையில் 33, அகமதாபாத்தில் 14 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் நவம்பர் மாதம் முழுவதும் 1,232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமான சேவை ரத்தானதற்கான முக்கிய காரணங்களை இண்டிகோ நிர்வாகம் பின்வருமாறு விளக்கியுள்ளது:

  • விமானிகள் பற்றாக்குறை மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் – 755 விமானங்கள்

  • வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) கோளாறு – 92 விமானங்கள்

  • விமானம் மற்றும் விமான நிலைய கட்டுப்பாடுகள் – 258 விமானங்கள்

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இதற்கிடையில், விமானிகள் பணி நேர வரம்பை மீறி பணிபுரிவதைத் தடுக்கும் பொருட்டு, பணி நேர விதிகளை கடுமையாக அமல்படுத்தி வருவதால், விமானிகள் பற்றாக்குறை அதிகரித்திருக்கலாம் என துறைவியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here