கோத்தா கினபாலு,:
சபா யாங் டிபெர்துவா நெகிரி துண் மூசா அமன், நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கினபடங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மூசாவை ஏற்றி வந்த வாகனக் குழாம் இரவு 11.30 மணியளவில் அந்த தனியார் மருத்துவமனைக்கு வந்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் குறித்த வாகனங்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டதாகக் காணப்பட்டது.
சபா பாரிசான் நேஷனல் தலைவரும், சபா அம்னோ இணைப்பாளருமான புங்க் முக்தார், நேற்று பிற்பகல் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபா அம்னோ செயலாளர் டத்தோ ஜஃப்ரி அரிஃபின், நவாஹ் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான புங் மொக்தார் சிறுநீரக செயலிழப்பு மற்றும் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக தற்போது தீவிர நிலைமையில் உள்ளதாக முன்னர் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.




















