இந்து தர்மத்தில் சனி பகவான் ‘நீதிமான்’ என்று அழைக்கப்படுகிறார். ஒருவருடைய கர்மாவிற்கு (செயல்களுக்கு) ஏற்ப பலன்களை வழங்குபவர் அவர். ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது ஏழரை சனி பாதிப்பு உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் சில குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வது நல்ல பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது. இது சனி பகவானின் தீய பலன்களை குறைத்து, சனி பகவானின் அருளை பெற உதவும். சனிக்கிழமை சனி பகவானின் அருளையும், கருணையையும் பெறுவதற்கான நாளாகும். அதே சமயம், தெரியாமல் செய்யும் சில தானங்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.சனிக்கிழமைகளில் தெரியாமல் செய்யும் சில தவறுகள் சனி பகவானின் கோபத்தை பெற செய்து விடும். இதனால் பலவிதமான துன்பங்கள், தடைகள், பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்து விடும்.
சனிக்கிழமைகளில் தானம் செய்ய வேண்டியவை:
1. கருப்பு எள்: சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமான பொருளாகவும், அவருக்குரிய தானியமாகவும் கருதப்படுவது கருப்பு எள். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு கருப்பு எள் தானம் செய்வது சனி தோஷத்தின் தீவிரத்தைக் குறைக்கும்.
2. கடுகு எண்ணெய்: சனிக்கிழமையன்று ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை ஊற்றி, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து (சாயா தானம்), பிறகு அந்த எண்ணெயை தானம் செய்வது தோஷங்களை நீக்கும்.
3. கருப்பு நிற ஆடைகள்: கருப்பு நிறம் சனியின் நிறமாகக் கருதப்படுகிறது. எனவே, வசதியற்றவர்களுக்கு கருப்பு நிற போர்வை அல்லது ஆடைகளைத் தானம் செய்வது புண்ணியத்தைத் தரும்.
4. இரும்புப் பொருட்கள்: இரும்பு சனி பகவானுடன் தொடர்புடைய உலோகமாகும். இரும்பாலான பாத்திரங்கள் அல்லது பொருட்களைத் தானம் செய்வது தடைகளை நீக்க உதவும்.
5. கருப்பு உளுந்து: கருப்பு உளுந்து தானம் செய்வது பொருளாதார ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் என்று நம்பப்படுகிறது.
6. காலணிகள்: ஏழைகளுக்கு செருப்புகளை தானம் செய்வது ஜாதகத்தில் உள்ள சனி தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும்.
சனிக்கிழமைகளில் தவிர்க்க வேண்டியவை (வாங்கக் கூடாதவை):
1. உப்பு: சனிக்கிழமையன்று உப்பு வாங்குவது கடனை அதிகரிக்கும் என்றும் குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
2. கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்கள்: சனிக்கிழமைகளில் கத்தரிக்கோல் அல்லது கத்தி போன்ற கூர்மையான பொருட்களை வாங்குவது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
3. எண்ணெய்: சனிக்கிழமையன்று எண்ணெயைத் தானம் செய்யலாமே தவிர, வீட்டிற்குப் புதிய எண்ணெய் வாங்கக்கூடாது.
4. நிலக்கரி அல்லது இரும்பு: சனிக்கிழமையன்று இரும்புப் பொருட்களை வீட்டிற்கு வாங்குவது அசுபமாகக் கருதப்படுகிறது (தானம் செய்யலாம், ஆனால் வாங்கக்கூடாது).
சனிக்கிழமைகளில் செய்யும் தானம் தன்னலமற்றதாக இருக்க வேண்டும். தேவையுள்ளவர்களுக்கு உண்மையான மனதுடன் உதவி செய்யும் போது, சனி பகவான் கனிவான பார்வையை வழங்குவார் என்பது ஐதீகம்.



















