RM 2.5 பில்லியன் ஊழலில் எனக்கு தொடர்பா?- அவதூறு என்கிறார் ரஃபிஸி

கோலாலம்பூர்:

UEM Lestra என்ற நிறுவனத்திற்கு 750 MW சோலார் திட்டத்தை வழங்கியதில் தமக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறப்படுவது பெரும் அவதூறு என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

அந்த மிகப்பெரிய குத்தகையை அந்நிறுவனத்திற்கு வழங்கியதில் தமக்கு ஆதாயம் உண்டு என இன்ஃபுளுவன்சர் அரிஸ் ரம்லி அல்லது Caprice குற்றம்சாட்டியிருக்கிறார். 2.5 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஊழலில் தமக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இது மற்ற சம்பவங்கள் போல் அல்ல. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எவ்வித ஆதாரங்களையும் காட்டவில்லை. லட்சக்கணக்கான பணம் அல்லது தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்படவில்லை.

என்னுடைய சொந்த வங்கிக் கணக்கில் பல லட்சம் ரிங்கிட் பணம் இல்லை.ஓர் ஆதாரமும் இல்லை. ஆனால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி செய்தியாகவும் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்று ரஃபிஸி குறிப்பிட்டார்.

இவ்வாறான அவதூறுகளை பரப்பும்படி தூபம் போடுவதற்கும் தூண்டிவிடுவதற்கும் ஒரு தரப்பு இருக்கவே செய்கிறது. டத்தோஸ்ரீ நஜிப்பை விட ஆகப் பெரும் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக என் மீது அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது. Caprice அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் ஒரு காணொலியில் இந்த அவதூறு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

இந்த மிகப்பெரிய குத்தகையை வழங்கி இருப்பதன் மூலம் UEM Lestra நிறுவனத்திடமிருந்து தாம் லஞ்சம் வாங்கியிருக்கும் ஒரு தோரணையை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதுவரை நான் பகிர்ந்திருக்கும் ஆதாரங்கள் நானோ பொருளாதார அமைச்சோ தனியார் வர்த்தக நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகளில் தலையிடும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதை தெளிவாக காட்டுகின்றன.

அதேசமயம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் தம்முடைய podcast YBM நேரலையில் இன்னும் அதிகமான ஆதாரங்கள், தகவல்கள் பகிரப்படும் என்று ரஃபிஸி கூறினார்.

இந்நிலையில் இந்த podcast-இல் சொல்லப்படும் அத்தனை தகவல்களையும் தன்னை பின் தொடரும் பயனர்களுக்கு பகிர்வதற்கு Caprice – க்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here