நகராட்சி மன்ற அதிகாரியைத் தாக்கிய 3 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கைது!

சண்டக்கான் | மார்ச் 10, 2026:

சண்டக்கான் நகராட்சி மன்ற (MPS) அமலாக்க அதிகாரி ஒருவர் பணியின் போது தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 14 வயது சிறுவன் உட்பட மேலும் மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு 14 வயது சிறுவன். இவர்கள் கடந்த சனிக்கிழமை (மார்ச் 7) பத்து 8 (Batu 8), கம்போங் பாரியாவா மற்றும் கம்போங் மெலாயு ஆகிய இடங்களில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டனர் என்று, சண்டக்கான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜார்ஜ் அப்துல் ரக்மான் தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட மூவரும் இச்சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) பத்து 8 சந்தையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

சந்தையில் சட்டவிரோத சிகரெட்டுகளை வெளிப்படையாக விற்றுக் கொண்டிருந்த ஒரு நபரை அமலாக்க அதிகாரி கண்டித்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் அந்த அதிகாரியைத் தாக்கியுள்ளது.

விபத்து நடந்த அதே நாளில் (வெள்ளிக்கிழமை) ஒரு சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது மொத்தக் கைதுகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பிரிவு 186: அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பிரிவு 332: பணியில் இருக்கும் அரசு ஊழியரைத் தாக்கி காயம் ஏற்படுத்துதல், பிரிவு 147: கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற பின்வரும் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here