பெருநாள் காலத்திற்கு மலேசியாவின் உணவு இருப்பு சீராக உள்ளது – முகமட் சாபு

கோலாலம்பூர்:

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், மலேசியாவின் உணவு இருப்பு மே அல்லது ஜூன் மாதம் வரை சீராகவும் போதுமானதாகவும் இருக்கும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

மார்ச் 13, 2026 இன்று புத்ராஜயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பின்வரும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்:
மலேசியாவின் உணவு இறக்குமதி பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், ஆசியான் நாடுகள், பிரேசில், அர்ஜென்டினா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தே பெறப்படுகிறது. எனவே, அரிசி, கோழி, முட்டை, மீன், மாட்டிறைச்சி, எருமை இறைச்சி, பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்தது மே அல்லது ஜூன் மாதம் வரை தாராளமாகக் கிடைக்கும்.
எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் தேசிய அளவில் அரிசி இருப்பை ஒன்பது மாத நுகர்வுக்குத் தேவையான அளவிற்கு உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க உதவும் வகையில், சந்தை விலையை விட 10% முதல் 30% வரை மலிவான விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் ‘ரஹ்மா’ (Rahmah) மற்றும் ‘அக்ரோ மதானி’ (Agro Madani) விற்பனைத் திட்டங்கள் தொடரும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here