சிங்கப்பூர் விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இந்திய வாலிபர் கைது

சிங்கப்பூர்,தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ விமானத்தில், ஆகாஷ் திவாரி (வயது 35) என்ற இந்திய வாலிபர் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானப் பணிப்பெண் உணவு மற்றும் குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆகாஷ் திவாரி அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரை எச்சரித்துவிட்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விமானம் சிங்கப்பூரில் தரை இறங்கியதும். அங்கு தயாராக இருந்த விமான நிலையப் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் கோர்ட்டில் நேற்று விசார ணைக்கு வந்தது. தன் மீதான குற்றச்சாட்டை அந்த வாலிபர் மறுத்துள்ளார். இருப்பினும், சிங்கப்பூர் சட்டப்படி பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்துக்காக அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது கடுமையான பிரம்படி தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here