“என்னை விலை பேசினார்கள்…”- பிக்பாஸ் பிரபலம் அதிர்ச்சி தகவல் …

சென்னை,திரைப்படத் துறையில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் “காஸ்டிங் கவுச்” பிரச்சினை குறித்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நைனிகா அனசூரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது “காஸ்டிங் கவுச்” பிரச்சினையால் தானும் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

அவர் கூறுகையில், “ஒரு நாள் எனக்கு நெருக்கமான ஒருவர், விலை நிர்ணயிக்கப்பட்டு என் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, வருவதாக கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய தொடர்பு இல்லாமல் இப்படிச் சம்பவம் நடந்தது மிகவும் வேதனை அளித்தது. இப்போது திரைப்படத் துறையில் நேரடியாக ‘கமிட்மெண்ட்’ கேட்கும் நிலை உள்ளது. என் மகளை இந்த துறைக்கு அனுப்ப மாட்டேன்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here