தும்பாட்டில் 5 கிலோ கஞ்சாவுடன் ஜோர்டான் நபர் உட்பட மூவர் கைது!

தும்பாட்:

கிளாந்தான், தும்பாட் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் RM400,000 மதிப்பிலான 5 கிலோ கஞ்சா மொட்டுகளுடன் ஜோர்டான் நாட்டு நபர் ஒருவரும், இரண்டு உள்ளூர் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இன்று மாலை 4 மணியளவில், சிம்பாங்கான் (Simpangan) பகுதியில் உள்ள மஸ்ஜிட் அத்-தக்வா சந்திப்பில் பொதுப் பாதுகாப்புப் படையினர் (GOF) கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) ரக கார் ஒன்றை நிறுத்திச் சோதனை செய்தனர்.

சோதனையின் போது, காரில் பல பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சா மொட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

சோதனையில் ஒரு ஜோர்டான் நாட்டு நபர் மற்றும் இரண்டு உள்ளூர் பெண்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், 5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் RM400,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பிரிகேட் தளபதி, சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர் அஹ்மட் ராட்ஸி ஹுசைன் இது குறித்து கூறுகையில், “இந்த போதைப்பொருள் அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படுகிறது. இவை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது,” எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக தும்பாட் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here