திடீரென பற்றி எரிந்த வீடு; அதிஷ்டவசமாக கார், மோட்டார்சைக்கிளை காப்பாற்றிய உரிமையாளர்

பெசூட்:

“ரமழான் பசாரில் நோன்பு திறப்பதற்காக உணவு வாங்கிவிட்டு திரும்பியபோது, தனது வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு ஆச்சரியமடைந்ததாக முகமட் நட்ரி ஹாரிஸ்,56 கூறினார்.

சம்பவத்தன்று வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காரை தன்னால் காப்பாற்ற முடிந்தது என்று குறித்த நபர் சொன்னார்.

நான் காலை 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினேன், பின்னர் நோன்பு திறப்பதற்காக உணவு வாங்கிக்கொண்டு, மாலையில் வீட்டிற்கு வந்தபோது, ​​​​வீடு தீயில் எரிவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here