DAP யுடன் கூட்டணி வைப்பதற்குப் பதில் அமைச்சர் பதவியையே துறப்பேன் என்று கூறிய ஓன் ஹாபிஸின் கருத்துக்கு அந்தோணி லோக் பதிலடி

கோலாலம்பூர்:

அடுத்த ஜோகூர் மாநில அரசாங்கத்தை அமைப்பதில் டிஏபி (DAP) கட்சியுடன் ஒத்துழைப்பதற்குப் பதிலாகத் தனது மந்திரி பெசார் (Menteri Besar) பதவியையே துறக்கத் தயாராக இருப்பதாக ஜோகூர் பாரிசான் நேஷனல் (BN) தலைவர் டத்தோ ஓன் ஹாபிஸ் காஸி கூறியதற்கு, டிஏபி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

இஸ்கண்டார் புத்திரியில் நடைபெற்ற தேர்தல் இயந்திரத் தொடக்க விழாவில் பேசிய ஓன் ஹாபிஸ், டிஏபியுடன் ஒரே மேஜையில் அமர்வதைக் காட்டிலும் மந்திரி பெசார் பதவியில் இல்லாமல் இருப்பதே மேல் என கூறியதற்கு, “உங்கள் அகந்தையைத் தொடருங்கள்; ஆனால் உங்கள் (அம்னோ) தலைவர் மத்திய அமைச்சரவையில் ஒவ்வொரு வாரமும் டிஏபி பொதுச்செயலாளருக்குப் பக்கத்தில்தான் அமர்கிறார்” என அந்தோணி லோக் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய வேளையில், தற்போதைய மத்திய ஒற்றுமை அரசாங்கப் பங்காளிகளான இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மாநில அளவில் எழுந்துள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here