கோலாலம்பூர்:
வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி (BN) மொத்தமுள்ள 36 தொகுதிகளில் 25 இடங்களில் மட்டுமே போட்டியிடவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறை விளையாட்டரங்கில் நேற்று (ஜூலை 15) நடைபெற்ற தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிமுக விழாவில் பேசிய கூட்டணியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் இத்தகவலை வெளியிட்டார். எஞ்சிய 11 தொகுதிகளில் BN வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்றும், அத்தொகுதிகள் குறித்து ஒரு ‘நம்பிக்கையான நண்பருடன்’ (Trusted Friend) உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த நட்புத்தரப்பு பின்னர் அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் எதிர்க்கட்சியான பாஸ் (PAS) கட்சி, தேசிய முன்னணியின் முக்கிய அங்கமான அம்னோ (UMNO) கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், எஞ்சிய 11 இடங்களை BN விட்டுக்கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.


















