கோலாலம்பூர்:
மலேசியாவின் 7 மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் இன்று இரவு 9:00 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை, சூறாவளி காற்று மற்றும் இடி மின்னல் வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மாலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, கெடா (Kedah): சீக் (Sik), பாலிங் (Baling), பேராக் (Perak): உலு பேராக் (Hulu Perak), பாத்தாங் பாடாங் (Batang Padang), திரெங்கானு (Terengganu): செத்தியூ (Setiu), கோலா நெராஸ் (Kuala Nerus), உலு திரெங்கானு (Hulu Terengganu), கோலா திரெங்கானு (Kuala Terengganu), மாராங் (Marang), பஹாங் (Pahang): கேமரன் ஹைலேண்ட்ஸ் (Cameron Highlands), லிப்பிஸ் (Lipis), ஜெராந்துட் (Jerantut), மாரான் (Maran), குவாந்தான் (Kuantan), பெக்கான் (Pekan), ரொம்பின் (Rompin), ஜோகூர் (Johor): குளுவாங் (Kluang), மெர்சிங் (Mersing), கூலாய் (Kulai), கோத்தா திங்கி (Kota Tinggi), ஜோகூர் பாரு (Johor Bahru) மற்றும் சரவாக் (Sarawak): கூச்சிங் (Kuching), செரியான் (Serian), சமரஹான் (Samarahan), சாரிக்கேய் (Sarikei), சிபு (Sibu), முக்கா (Mukah), காபிட் (Kapit), பிந்துலு (Bintulu), மிரி (Miri), லிம்பாங் (Limbang) ஆகிய இடங்களும் சபாவின் (Sabah): சிபித்தாங் (Sipitang), தம்புனான் (Tambunan), துவாரான் (Tuaran), ரானாவ் (Ranau), லஹாட் டத்து (Lahad Datu), தெலுபிட் (Telupid), கினாபத்தாங்கான் (Kinabatangan), பெலுரான் (Beluran), பித்தாஸ் (Pitas) ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த சூறைக்காற்றும் வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலும் மரங்களுக்கு அடியிலும் நிற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




















