காணாமல் போன 13 வயது மாணவி இனாநாமில் பாதுகாப்பாக மீட்பு!

கோலாலம்பூர்:

லிகாஸில் (Likas) உள்ள SMK Lok Yuk மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து நேற்று (திங்கள்கிழமை) காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 13 வயது மாணவி, இனாநாமில் (Inanam) பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலைக் குடும்ப உறுப்பினர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று காலை 5:55 மணியளவில் பள்ளி வாசலில் விடப்பட்ட அம்மாணவி, பள்ளி வகுப்பிற்குச் செல்லவில்லை என்பது தெரியவந்தது. மாலை அவரை அழைக்க வந்தபோது அவர் இல்லாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் துறை விசாரணையைத் தொடர்ந்து, மாணவி இனாநாம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

மாணவி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தகவல்களைப் பகிர்ந்து உதவிக்கரம் நீட்டிய பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மாணவி காணாமல் போனதற்கான காரணங்கள் குறித்த முழு விவரங்களை அவரது குடும்பத்தினர் இன்னும் வெளியிடவில்லை. தற்போது அம்மாணவி காவல் துறையின் பாதுகாப்பிற்குப் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here