கோலாலம்பூர் :
பத்து பஹாட் கடற்பகுதியில் இன்று பிற்பகல் 4.12 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.
தேசிய வானிலை மற்றும் நிலநடுக்க செயல்பாட்டு மையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பத்து பஹாட் நகரத்திற்குத் தென்மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்த மிதமான நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எவ்விதச் சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.
























