குவா மூசாங்கின் கம்போங் மெரண்டோ காட்டில், நேற்று நள்ளிரவு தேன் எடுக்கச் சென்ற ஆடவர் மரத்திலிருந்து தவறி விழுந்து, உயிரிழந்தார்.
உயிரிழந்த அப்துல்லா சே நா, 35, என்பவர் 30 மீட்டர் உயர மரத்திலிருந்து அதன் வேர்ப்பகுதியில் விழுந்ததாக நம்பப்படுகிறது என்று, குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறினார்.
நள்ளிரவு 12.18 மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணையின்படி, கம்போங் கெரின்டிங்கில் இருந்து பாதிக்கப்பட்டவர், மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தேன் எடுக்க கம்போங் மெராண்டோவுக்குச் சென்றார் என்றும், தொழிலாளியாகப் பணிபுரியும் பாதிக்கப்பட்டருக்கு வருமான ஆதாரமாக தேன் எடுத்து, விற்கும் தொழில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
சூன் ஃபூ கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தையும் பாதிக்கப்பட்டவரின் உடலையும் சுற்றி பரிசோதனை செய்ததில், குற்றத்தின் கூறுகள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது என்றார்.
பெர்தாம் பாரு கிளினிக் உறுப்பினர்கள் குறித்த இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் குவா மூசாங் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது, அதற்கு முன் அடக்கம் செய்வதற்காக குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
“இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.









