ஷாஆலம்,
சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் மாபெரும் மொய்விருந்து நிகழ்வு, சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, ஷாஆலாமில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, ஆலவாய் அண்ணல் சொக்கநாதப் பெருமான் திருக்கோயில், தியான மண்டபம், சமயக் கல்லூரி மற்றும் 1200 பேருக்கு இடமளிக்கும் மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை உருவாக்கும் திட்டத்திற்கான நிதி திரட்டும் நோக்கில் நடைபெற்றது.

மலேசிய இந்துக்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் விழாவை சிறப்பித்தனர்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
•திருக்கோயில்: ஆலவாய் அண்ணல் சொக்கநாதப் பெருமான் எழுந்தருளும் புனித இடம்.
•தியான மண்டபம்: பக்தர்கள் தியானம் செய்யவும், சமய உரைகள் கேட்கவும் வசதியுடன் அமைக்கப்படும்.
•சமயக் கல்லூரி: தங்கு விடுதி மற்றும் முழுநேர பயிற்சியுடன், சமய ஆசிரியர்களை உருவாக்கும் கல்லூரி.
•மாநாட்டு மண்டபம்: 1200 பேரை இடமளிக்கும் பரந்த அரங்கு.

நிகழ்ச்சியின் மூலம், இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கான நிதி திரட்டப்பட்டதுடன், இதனை ஆதரித்து கலந்து கொண்ட அனைத்து தாராள தலைவர்களுக்கும் அறவாரியம் நன்றி தெரிவித்தது.




















