46ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் சீன பிரதமர்

அடுத்த வாரம் கோலாலம்பூரில் நடைபெறும் தொடக்க ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC)-சீனா உச்சநிலை மாநாட்டில் சீனப் பிரதமர் லீ கியாங் கலந்து கொள்வார். தற்போது ஆசியானின் சுழற்சித் தலைவராக இருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின்படி, லீ மே 26 முதல் மே 28 வரை மலேசியாவில் இருப்பார். ஒரு நாள் முன்னதாகத் தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டைத் தொடர்ந்து, மே 27 ஆம் தேதி முத்தரப்பு உச்சநிலை மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியான், GCC, சீனா இடையே முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு கூட்டங்களையும் மலேசியா நடத்துகிறது.

ஆசியான், GCC நாடுகள் ஆசியா, உலகளாவிய தெற்கில் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் முக்கியமான உறுப்பினர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் பெய்ஜிங்கில் கூறியதாக அனடோலு அஜான்சி (AA) மேற்கோள் காட்டினார். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் கூட்டு வளர்ச்சியையும் இந்த உச்சநிலை மாநாடு முன்னேற்றும் என்று அவர் கூறினார்.

கோலாலம்பூருக்கு வருவதற்கு முன்பு, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் அழைப்பின் பேரில், மே 24 முதல் மே 26 வரை இந்தோனேசியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here