பயிற்சியின் போது இறந்த மாணவரின் உடல் மறு பிரேதப் பரிசோதனைக்குத் தோண்டி எடுக்க உத்தரவு!

கோலாலம்பூர்:

கடந்த ஜூலை 28-ஆம் தேதி, உலு தீராமில் (Ulu Tiram) உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் (PULADA), பயிற்சியில் இருந்தபோது இறந்த, ஸ்கூடாய் யுடிஎம் (UTM Skudai) மாணவரான சம்சூல் ஹாரிஸ் சம்சுடின் (Syamsul Haris Shamsudin) என்பவரின் உடல், மறு பிரேதப் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறந்த மாணவரின் தாயார் உம்மூ ஹைமான் பீ (Ummu Haiman Bee) அளித்த கோரிக்கையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மலேசியத் தற்காப்புப் படையின் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் எந்தவொரு துன்புறுத்தல் அல்லது சித்திரவதையும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

அதிகாரிகள், பயிற்சியாளர்கள் உட்பட, அனைத்து சாட்சிகளும், பயிற்சி, நடைமுறைகளின்படி நடைபெற்றது என்று உறுதிப்படுத்தினர்.

எனினும், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, காவல்துறையும் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here