மவுண்ட் லியாங்கில் காணாமல் போனதாக இருநாட்களாக தேடப்பட்டுவந்த மலையேற்ற வீரர் உயிரிழந்தநிலையில் கண்டுபிடிப்பு

தஞ்சோங் மாலிம்:

இரண்டு நாட்களாக காணாமல் போனதாக கூறப்பட்ட மலையேற்ற வீரர், மவுண்ட் லியாங்கின் மேற்கு உச்சியில் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செயல்பாட்டு உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா, உயிரிழந்தவர் கெடா மாநிலம் சுங்கை பட்டானியைச் சேர்ந்த 34 வயதான முஸ்தக்கீம் மன்சூர் என உறுதிப்படுத்தினார்.

அவரின் உடல் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மவுண்ட் லியாங்கின் மேற்கு சிகரத்தில் மீட்பு குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு துறை, காவல்துறை, சிவில் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 22 பேர் ஈடுபட்டிருந்தனர்.

விசாரணைகளின்படி, முஸ்தக்கீம் அக்டோபர் 10 ஆம் தேதி பகாங்கின் ஃப்ரேசர்ஸ் மலைப்பகுதியிலிருந்து பத்து நண்பர்களுடன் மலையேற்றத்தைத் தொடங்கியிருந்தார்.

அவர் கடைசியாக அக்டோபர் 14 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், மேற்கு மவுண்ட் லியாங்க் சிகரத்தில், காலில் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் உடல் விசாரணைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here