மலேசியா தனது நான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையம் (MYCentre4IR) மூலம், உலக பொருளாதார மன்றத்துடன் (WEF) இணைந்து, இலக்கியவியல் (டிஜிட்டல்) அமைச்சகம் தென்கிழக்கு ஆசியா – அதற்கு அப்பால் உச்சநிலை மாநாட்டை மேம்படுத்துதல்: புதுமைகளை இயக்குதல் என்ற தலைப்பில் சசானா கிஜாங்கில் ஒரு நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வு செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல்மயமாக்கல், தொழில்துறை மாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று இலக்கியவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததோடு தொழில்நுட்ப நிர்வாகம், புதுமை குறித்த பிராந்திய உரையாடலின் ஒரு கூட்டாளராக நாட்டை நிலைநிறுத்தியது. இந்த உச்சநிலை மாநாட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த உச்சநிலைமாநாட்டின் முக்கிய சிறப்பம்சமாக ASEAN AI பாதுகாப்பு வலையமைப்பு (ASEAN AI Safe), மலேசியாவின் ASEAN தலைமைத்துவத்திற்கான முன்னுரிமை பொருளாதார வழங்கல் பற்றிய அறிவிப்பு இருந்தது.
இலக்கியவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறுகையில், 2030 ஆம் ஆண்டுக்குள் நம்பகமான நிர்வாகம், உள்ளடக்கிய திறமை மேம்பாடு உண்மையான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீடுகள் மூலம் மலேசியா ஒரு AI நாடாக மாற விரும்புகிறது. ASEAN தலைவராக, தொழில்நுட்பம் பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும், அனைத்து சமூகங்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் கூட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மற்றொரு முக்கிய மைல்கல், MYCentre4IR மற்றும் ERM இடையேயான கூட்டாண்மையில் உருவாக்கப்பட்ட நிலையான AI வெள்ளை அறிக்கையின் அறிவிப்பு ஆகும், இது பிராந்தியம் முழுவதும் பொறுப்பான மற்றும் ஆற்றல்-திறனுள்ள AI வரிசைப்படுத்தலை வழிநடத்த மைக்ரோசாப்ட் உடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டது.
உலக பொருளாதார மன்றத்தில் AI மையத்தின் தலைவரும் நிர்வாகக் குழு உறுப்பினருமான கோபிந்த் சிங் தியோ மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினருமான கேத்தி லி ஆகியோருக்கு இடையேயான உரையாடலின்போது ஆசியானின் பொறுப்பான AI மேம்பாட்டிற்கான கட்டமைப்பை ஆராய்ந்து, பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதில் AI திறன்களுக்கான பிராந்தியத்தின் அணுகலை மேம்படுத்துவதற்கான உத்திகளைப் பற்றி விவாதித்தது. ஆனால் AI மூலம் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உச்சநிலை மாநாட்டில் ஆசியான் துணைப் பொதுச் செயலாளர் சத்விந்தர் சிங் சிறப்புரையில் தொழில்நுட்பம் பகிரப்பட்ட செழிப்பு, உள்ளடக்கத்திற்கான உந்துசக்தியாக மாறுவதை உறுதி செய்வதற்கு பிராந்திய ஒத்துழைப்பு முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார். எல்லை தாண்டிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் மற்றும் அறிவார்ந்த யுகத்திற்கான நிறுவன தயார்நிலையை உருவாக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் ஆசியானின் பங்கை அவர் வலியுறுத்தினார்.









