கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் Budi Madani RON95 (BUDI95) திட்டத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் விளக்கினார்.
2026-ஆம் ஆண்டில் மட்டும் RON95 எரிபொருள் மானியத்தை இலக்கு நிர்ணயித்து வழங்குவதன் மூலம் சுமார் RM2.5 பில்லியன் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை அனைவருக்கும் பொதுவான மானியமாக வழங்கப்பட்டதில் இருந்த முறைகேடுகள் மற்றும் கசிவுகளைத் தடுப்பதன் மூலம் இந்தச் சேமிப்பு சாத்தியமாகும் என்று பிரதமர் கூறினார்.
இந்தத் திட்டம் நாட்டின் நிதிப் பொறுப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், பெரும்பான்மையான மலேசியர்களுக்கு விலையேற்றம் பாதிக்காத வகையில் விலைப் பாதுகாப்பையும் வழங்கும்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கும், அதே வேளையில் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் இடையிலான ஒரு சீரான முயற்சியாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.





















