சுகாதார அமைச்சகம் அதன் GitHub தரவுத்தளத்தின்படி, நேற்று 10 புதிய கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இறப்பு எண்ணிக்கை இப்போது 31,902 ஆக உள்ளது.
சிலாங்கூர் மூன்று இறப்புகளைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து சபாவில் இருவர், ஜோகூர், கெடா, கிளந்தான், மலாக்கா மற்றும் பகாங் தலா ஒரு உயிரிழப்பு.
கோலாலம்பூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், தெரெங்கானு, பேராக், சரவாக், பெர்லிஸ், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகியவை எந்த மரணத்தையும் பதிவு செய்யவில்லை.
நள்ளிரவு நிலவரப்படி, 45,208 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 146 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 65 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
மேலும் 3,116 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,836,159 ஆக உள்ளது.
























