சுகாதார அமைச்சகம் நேற்று மூன்று கோவிட்-19 இறப்புகளை அறிவித்தது. இறப்பு எண்ணிக்கை இப்போது 35,567 ஆக உள்ளது.
1,328 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 74 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையில், அமைச்சகம் 1,054 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்தது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 4,415,821 ஆக உள்ளது.




















